5,000 வாக்கு சாவடிகளை குறைக்க முடிவு: திமுக எதிர்ப்பு
சென்னை:
தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபடக் கூடாதுஎன்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,தமிழகத்தில் 54,917 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றை 49,335 ஆக குறைக்க முயற்சிகள் நடப்பதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. வாக்குச்சாவடிகளைக் குறைக்கக் கூடாது என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுங்கட்சியுடன் மட்டும் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. மற்றஅரசியல் கட்சிகளுடனும் தேர்தல் கமிஷன் ஆலோசித்திருக்க வேண்டும்.
வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே வாக்குச் சாவடிகளை அதிகரிக்க வேண்டுமேதவிர குறைக்கக் கூடாது. இதன் மூலம் வாக்காளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications