சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு மீண்டும் வேலை எப்போது?.: ஜெ. ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

3 நீதிபதிகள் குழுவினரால் பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு எப்போது பணிநியமன உத்தரவை வழங்குவது என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா, உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனைநடத்தினார்.

வேலை நிறுத்தம் செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட 5,814 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம், 3 நீதிபதிகள்கொண்ட குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பிறகு முதல் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், தலைமைச் செயலக ஊழியர்கள் 2,889 பேருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்குமாறுபரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மற்ற ஊழியர்கள் குறித்த அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இந் நிலையில், 2,889 பேருக்கு மீண்டும்பணி நியமனம் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்,நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைநடத்தினார்.

மற்ற ஊழியர்கள் குறித்த அறிக்கையும் தாக்கல் ஆன பின்னர் அனைவருக்கும் சேர்த்து மீண்டும் பணி நியமனம்வழங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள்அடுத்த மாதம் முதல் மீண்டும் வேலைக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+