ரயில்வே கேங்மேன் தேர்வு எழுதிய பி.இ. பட்டதாரிகள்!
சென்னை:
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கேங்மேன், கலாசி பணியாளர்களுக்கான தேர்வில் பி.இ.பட்டதாரிகளும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
ரயில்வே தேர்வு வாரியத்தால், தென்னக ரயில்வேயில், கேங்மேன், கலாசி போன்ற பணிகளுக்கு 1,681 பேரைத்தேர்ந்தெடுப்பதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்தது.
இதற்குய குறைந்த பட்சக் கல்வித் தகுதி 8-வது வகுப்பு தேர்ச்சி. ஆனால் பி.இ. படித்த பட்டதாரிகளும் கூட இந்தத்தேர்வில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 4.5 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2.6 லட்சம் பேர் மட்டுமேதகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டது. தமிழகம், கேரளம், கர்நாடகத்தில் மொத்தம் 14 மையங்களில்இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இவற்றில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்துதான் அதிக அளவில் விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். முதல் முறையாக ஆங்கிலம், இந்தி தவிர, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியமொழிகளிலும் கேள்வித் தாள்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வுக்கு வெளியூர்களிலிருந்து சென்னைக்கு ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்திருந்தனர். அவர்கள்அனைவரும் சனிக்கிழமை இரவு முழுவதிலும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலேயே தங்கியிருந்தனர்.இதனால் ரயில் நிலையம் முழுவதும் நிரம்பி வழிந்தது.












Click it and Unblock the Notifications