தாமரைக்கனிக்கு குற்றப் பத்திரிக்கை: இன்று தரப்படுகிறது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனிக்கு இன்று சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில்தாமரைக்கனி பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது பாண்டி பஜார்போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந் நிலையில் தாமரைக்கனி முன்ஜாமீன்பெற்றார். இந்த வழக்கில் இன்று தாமரைக்கனிக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுகிறது.
தாமரைக்கனி முன்பு அதிமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்கியவர். தற்போது திமுகவில் உள்ளார். இவர் மீதுகடந்த இரண்டு ஆண்டுகளில் 18 அவதூறு வழக்குகளை அதிமுக அரசு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications