நாடாளுமன்றம் கூட்டப்படுமா?: ரணில்- சந்திரிகா நாளை மீண்டும் சந்திப்பு
கொழும்பு:
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் பாதுகாப்புத் துறையை பகிர்ந்து கொள்ள முடியாது என அதிபர் சந்திரிகாமறுத்துள்ளார்.
அமைதி முயற்சிகள் மீண்டும் தொடர்வதற்காக சந்திரிகா பாதுகாப்புத் துறையை ரணிலுடன் பகிர்ந்து கொள்ளத்தயாராக இருப்பதாக வந்த செய்திகளை அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது
சந்திரிகாவின் செய்தித்துறை இயக்குனர் ஜனதாச பெரிஸ் இதைத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சகமும் ரணில்தலைமையிலான சமரசத் தீர்வுக்கான செயலகமும் ஒருங்கிணைந்து ஒரு கமிட்டி அமைத்துச் செயல்படலாம்என்றுதான் அதிபர் யோசனை கூறினார் என்றார் அவர்.
இந் நிலையில் சந்திரிகாவின் அலுவலக மூத்த அதிகாரி மனோ டிட்டவெல்லா, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் மாலிக் சமரவிக்கிரமவைச் சந்தித்துப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பது குறித்து பேசினார்.
இதன்படி ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய முண்ணனி கட்சித் தலைவர்கள் சந்திரிகாவை நாளைச் சந்தித்துஅதிகாரப் பகிர்வு குறித்து பேச்சு நடத்த உள்ளார்கள். பட்ஜெட் தாக்கல் செய்ய பாராளுமன்றத்தைக் கூட்டுமாறுசந்திரிகாவை ரணில் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை சந்திரிகா கூட்டுவாரா என்பதற்கான விடை நாளைய சந்திப்பில்தெரிய வரும். கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.