For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல் நிலையத்தில் காதலர்களை சேர்த்து வைத்த போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜாதி மற்றும் பணத்தைக் காரணம் காட்டி காதலர்களைப் பிரிக்க நினைத்தவர்களிடமிருந்து காதலர்களை மீட்டுஅவர்களுக்கு காவல் துறையினரே கல்யாணம் செய்து வைத்தனர்.

சென்னை, பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி. 20 வயதான இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரூபன். இவர் தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இருவரும் காதலித்தனர். ஆனால் இந்தக் காதலுக்கு வழக்கம் போல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூபன்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், வசதியில்லாதவர், வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதாலும்பிங்கியின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் காதலில் உறுதியாக இருந்த இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, பரங்கிமலைக் காவல் நிலையத்தில்தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் அடைக்கலம் தந்து திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X