யானைகள் ஓய்வு முகாம் தொடங்கியது
ஊட்டி:
கோவில் யானைகளின் ஓய்வு முகாம் முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாத காலத்திற்கு முதுமலை வனப்பகுதியில் ஓய்வளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ளகோவில்களிலிருந்து 120 யானைகளை முதுமலைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.
ஆனால் பல யானைகள் லாரிகளில் ஏற மறுத்து முரண் பிடித்தன. இதனால் திட்டமிட்டபடி யானைகளைமுதுமலைக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பல யானைகளை அடித்தும், கயிற்றால் இழுத்தும்பார்த்தனர், ஆனால் யானைகள் மசியவில்லை. இதையடுத்து 55 யானைகள் மட்டுமே முதுமலைக்கு கொண்டுவரப்பட்டன.
முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் புத்துணர்ச்சி மையத்தில் ஓய்வு முகாம் நேற்று தொடங்கியது. இந்துஅறநிலையத் துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில்கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தனர்.
55 யானைகள் தவிர ஏற்கனவே இந்த முகாமில் உள்ள 26 யானைகளும், பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் உள்ள 20யானைகளும் ஓய்வு முகாமில் கலந்து கொண்டுள்ளன.
ஒரு மாத காலம் நடக்கவுள்ள இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள யானைகளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் உணவுவகைகளும், தடுப்பு ஊசிகளும் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கிடையே, இந்த புத்துணர்ச்சி முகாம் சட்ட விரோதமானது என்று கூறி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த உயிர்ச்சூழல் மண்டல பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதிபெறாமல் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும்.
மேலும், 30 நாட்களுக்கு மட்டும் லேகியம் கலந்த சத்துணவைக் கொடுப்பதால் யானைகளுக்கு புத்துணர்ச்சி வந்துவிடாது. எனவே இந்த முகாமைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications