இந்து விவகாரம்: உச்ச நீதிமன்ற நோட்டீசைப் பெற தமிழகம் மறுப்பு?
சென்னை:
இந்து, முரசொலி ஆசிரியர்கள், நிருபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்அனுப்பி நோட்டீஸை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்து ஆசிரியர் என்.ரவி, நிருபர்கள் மாலினி பார்த்தசாரதி, ஜெயந்த், ராதா வெங்கடேசன், பதிப்பாளர் ரங்கராஜன்மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோரைக் கைது செய்ய சபாநாயகர் காளிமுத்து பிறப்பித்த உத்தரவுக்குஉச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தக் கைது நடவடிக்கை சரிதானா என்று கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது. ஆனால், நோட்டீஸைப் பெற தமிழக அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த வழக்கில் தமிழக அரசின் நிலையை விளக்க உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யவும்திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், அதிமுகஎம்.பியும் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்குகளில் ஆஜராகி வருபவருமான ஜோதி ஆகியோர் அவசரமாகடெல்லி சென்றுள்ளனர்.
இவர்கள் இந்து, முரசொலி விஷயத்தில் தமிழக அரசின் நிலையை விளக்கி மனு செய்யவே சென்றிருப்பதாகக்கூறப்படுகிறது.
ஆனால், திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவே இவர்கள் சென்றுள்ளதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.