வேலூரில் ரூ. 50 லட்சம் போலி லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள போலி லாட்டரிச் சீட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே போலீஸார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு டாடா சுமோ கார் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தைப் போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காரிலிருந்த 2 பேர் வேகமாக இறங்கி ஓடினர். டிரைவரும் ஓடப் பார்த்தார். போலீஸார் அவரை வளைத்துப் பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் தில்ஷாத் அகமது என்று தெரியவந்தது.
காரில் சோதனை போட்டபோது, கட்டுக் கட்டாக வெளி மாநில லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் போலி லாட்டரிச் சீட்டுகள். அவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம்.
தப்பியோடிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications