பதவி பறிப்பு: இளங்கோவன் அதிர்ச்சி
டெல்லி:
தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் பதவி பறிக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன்,
இப்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையில் இந்த மாற்றத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இருப்பினும் வாசனுக்கு முழு ஆதரவு தருவேன் என்றார்.
முகம் வெளிறிக் காணப்பட்ட சோ.பா.வும், வாசனுக்கு முழு ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்தார்.
சோ.பா. மற்றும் இளங்கோவனிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே ராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்துவிட்டதாகத் தெரிகிறது. நேற்று இவர்களை டெல்லிக்கு அழைத்து பதவி பறிப்பு பற்றி சோனியா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜி.கே.வாசனை புதிய தலைவராக நியமித்து சோனியா காந்தி உத்தரவிட்டார். அதே போல தமிழக காங்கிரஸ் கமிட்டியும் கூணடோடு கலைக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அடுத்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது இளங்கோவனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications