சந்திரிகா- ரணில் மீண்டும் சந்திப்பு: இணைந்து செயல்பட குழு அமைப்பு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இன்று மீண்டும் சந்தித்து பேச்சுநடத்தினர். அப்போது தேசியப் பிரச்சனைகளில் இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து புதிய திட்டம் வகுக்கஅதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைக்க இருவரும் முடிவு செய்தனர்.
இலங்கையில் சந்திரிகாவால் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடியையடுத்து, நார்வே அமைதிக் குழு நாடுதிரும்பிவிட்ட நிலையில், புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் கேள்விக் குறியாக உள்ள சூழலில் இந்தச் சந்திப்புநடந்தது.
கடந்த வாரம் இருவரும் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது. இதையடுத்து இருவரும் தங்கள் பிரதிநிதிகளைசந்திக்க வைத்தனர். இந் நிலையில் சந்திரிகாவின் அழைப்பையேற்று மீண்டும் இன்று ரணில் அவரைச் சந்தித்தார்.திட்டமிட்டதைவிட ஒரு மணி நேரம் தாமதமாகவே இந்தச் சந்திப்பு தொடங்கியது.
ஒன்றரை மணி நேரம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், எதிர்காலத்தில் அதிபரும் பிரதமரும் தேசிய விவகாரங்களில் முரண்பாடில்லாமல், கூட்டாக செயல்படும் வகையில்திட்டம் வகுக்க அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்படுகிறது.
அதிபரும் பிரதமரும் இரு வாரங்களில் மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதலில்தங்களுக்கிடையிலான அதிகாரச் சண்டையைத் தீர்த்துவிட்டு அமைதிப் பேச்சு குறித்து பின்னர் முடிவு செய்யலாம்என இருவரும் தீர்மானத்துள்ளதாகத் தெரிகிறது.
ராணுவத்துறை, உள்துறையை தன் அமைச்சர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என ரணில் கோரிவருகிறார். இதை சந்திரிகா ஏற்க மறுத்து வருகிறார்.