யானை முகாம்: சில நாள் புத்துணர்வு போதாது-டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யானைகளுக்கு சில நாட்கள் உணவு கொடுத்து, புத்துணர்வு ஊட்டினால் பிரச்சினை தீர்ந்து விடாது என்று மத்தியசுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சென்னை வந்த டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், யானைகளைக் கூட்டிச் சென்று முகாம் அமைத்துசில நாட்களுக்கு உணவு கொடுத்து, புத்துணர்வு அளித்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. இததற்கு நிரந்தரதீர்வு காணப்பட வேண்டும்.
யானைகளை கூட்டிச் செல்லும்போது அவை துன்புறுத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. நானும் டிவியில்பார்த்தேன். அதனால்தான் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications