2,261 அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்
சென்னை:
3 நீதிபதிகள் குழுவின் பரிந்துரைப்படி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ள 2,261 ஊழியர்கள் இன்று மீண்டும்பணிக்குத் திரும்பினர்.
3 நீதிபதிகள் குழு சமீபத்தில் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, தலைமைச் செயலகம் மற்றும் சென்னை நகரஅரசு அலுவலகங்களைச் சேர்ந்த 587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 2,261 பேர்பல்வேறு தண்டனைகளுடன் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவதாகவும் அரசு அறிவித்தது.
இதன்படி 2,261 பேர் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தனர். காலை முதலே இவர்கள் சம்பந்தப்பட்டஅலுவலகங்களில் குவிந்தனர். அவர்களுக்குப் படிப்படியாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் கூட்டுக்கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள 587 ஊழியர்கள்சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
டிஸ்மிஸ் ஆனவர்களில் ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் அனைவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications