வாசன் தலைமையில் காங். பலம் பெறும்: ஞானதேசிகன்
சென்னை:
ஜி.கே.வாசன் தலைமையில் தமிழகக் காங்கிரஸ் கட்சி புதுப் பொலிவு பெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஞான தேசிகன் எம்.பி. கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஞானதேசிகன் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.வாசன் தலைமையில் கட்சி புதுப் பொலிவு பெறும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலை தமிழக காங்கிரஸ் கட்சி வாசன் தலைமையில் வலுவுடன் சந்திக்கும்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இருக்கலாம், ஆனால் கோஷ்டிப் பூசல் இல்லை. வாசன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என்றார்.
வருகிற வெள்ளிக்கிழமை சென்னைக்கு வரும் வாசனுக்கு விமான நிலையத்தில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்படும் என்றும் ஞானதேசிகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications