தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை விரைவு பார்சல் மூலம் அனுப்ப தபால்துறையும்,திருவாங்கூர் தேவஸ்தானமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
மண்டல- மகரவிளக்குப் பூஜைகளையொட்டி, இம் மாதம் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதிவரை இந்த வசதி அமலில் இருக்கும்.
தபாலில் பிரசாதம் பெற விரும்புவோர்கள் ரூ.150க்கு மணி ஆர்டரை ‘எக்ஸிகியூடிவ் ஆபிஸர், திருவாங்கூர்தேவஸ்தானம், சபரிமலை, பதனம்திட்டா மாவட்டம்’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதில் ரூ.10 கோவில் அன்னதானம் வழங்க பயன்படுத்தப்படும்.
வழக்கமான பிரசாதத்துடன் அப்பம் பாக்கெட்டும், அரவானா பிரசாத டின்னும் பார்சலில் சேர்த்து அனுப்பப்படும்என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications