ஹஜ் புனிதப் பயணம்: தமிழக அரசின் நிபந்தனைகள் செல்லும்- உயர் நீதிமன்றம்
சென்னை:
ஹஜ் பயணம் தொடர்பாக மாநில அரசு விதித்துள்ள சில நிபந்தனைகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
ஹஜ் பயணம் செல்லும் யாத்ரீகர்கள், மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையைப் பெறுவதற்கு சிலவிதிமுறைகளை மாநில ஹஜ் கமிட்டி உருவாக்கியது.
இதன்படி ஏற்கனவே ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மெக்காவில் உள்ளஆற்காடு நவாபுக்குச் சொந்தமான கட்டடங்களில் தங்குபவர்கள் ஆகியோருக்கு மானியம் பெறும் தகுதி கிடையாதுஎன்று புதிய விதிமுறையை ஹஜ் கமிட்டி உருவாக்கியிருந்தது.
இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி அரசு உத்தரவும் வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து சையத் அகமது என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பேஹஜ் பயணத்திற்கான யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே அரசு திடீரென்றுகட்டுப்பாடுகளை விதிப்பது நியாயமில்லாதது என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஹஜ்கமிட்டி மற்றும் அரசின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்று கூற மனுதாரருக்கு உரிமையில்லை என்று கூறிஅரசு விதித்த நிபந்தனைகள் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications