அரவாணிகளுக்கு வீடுகள் வழங்கிய கலெக்டர்!
சென்னை:
வேலூர் மாவட்டம் ஆத்து மோட்டூர் என்ற கிராமத்தில் அரவாணிகளுக்காக ரூ. 8 லட்சம் செலவில் தொகுப்புவீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
அரவாணிகளுக்காக தனியாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட அரவாணிகள் வசிக்கவுள்ளனர். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில்உள்ளனர். மொத்தம் 20 வீடுகள் இங்கு உள்ளன. குடிநீர், கழிப்பறை என அத்தனை வசதிகளும் இந்தக்குடியிருப்பில் உள்ளது.
அரவாணிகளுக்குத் தொழிற் பயிற்சி தருவதற்கான பயிற்சி நிலையம், இந்தக் குடியிருப்புக்கு அருகேஉருவாகவுள்ளது. ஏற்கனவே பேப்பர் பைகளைத் தயாரிப்பது எப்படி என்பது குறித்து அரவாணிகளுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. அவற்றை விற்பனை செய்வதற்கான உதவி மையம், இந்த பயிற்சி மைய வளாகத்தில்அமைக்கப்படவுள்ளது.
இதுதவிர காட்பாடி உழவர் சந்தையில் அரவாணிகள் தயாரிக்கும் பேப்பர் பைகளை விற்பனை செய்வதற்காகஇரண்டு கடைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன்தாஸ் குடியிருப்பு குறித்துக் கூறுகையில், வீடுகள் மட்டுமல்லாது, இவர்கள்சொந்தமாக தொழில் செய்து சமூகத்தில் மற்றவர்களைப் போலவே சம அந்தஸ்துடன் வாழ வழி செய்துள்ளோம்.
அரவாணிகளுக்காக ரேஷன் கார்டுகள் கொடுக்கவும், கல்வி கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தவும் தனி கவனம்எடுத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
குடியிருப்பைக் கட்ட பெரிதும் உதவிய மோகன்தாஸைப் பாராட்டும் விதமாக அவரது பெயர் இந்தக்குடியிருப்புக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.