திருப்பதியில் அப்துல் கலாம்
திருப்பதி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு நாள் பயணமாக இன்று திருப்பதி வந்தார்.
விமானப்படை விமானத்தின் மூலம் ரேணிகுண்டா விமானநிலையத்தில் வந்திறங்கிய கலாமை ஆந்திர மாநிலஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வரவேற்றனர்.
அப்துல் கலாம் திருப்பதியிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைைக்கழகத்தின் பொன் விழாக்கொண்டாட்டங்களைத் தொடக்கி வைக்கிறார். பின்னர் இந்தியப் பல்கலைக் கழகங்கள் கூட்டமைப்பின் 78 வதுஆண்டுக் கூட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.
பின்னர் நாட்டின் 180 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்களுடன் கலாம்கலந்துரையாடுகிறார்.
பின்னர் திருமலை செல்லும் அப்துல் கலாம், ஏழுமலையான தரிசிக்கிறார். அதன் பின், அரசு சாரா அமைப்புகட்டியுள்ள சேவா நிலையத்ததை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி திரும்புகிறார்.
கடந்த மாதம் சந்திரபாபு நாயுடுவின் மீதான கண்ணிவெடி தாக்குதலுக்குப் பின், குடியரசுத் தலைவர் இன்றுவந்துள்ளதால் திருப்பதியிலும், திருமலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications