For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதியை வளைக்க முயற்சி: மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாட்டில் சில நீதிபதிகள் தாங்கள் தீர்ப்பு எழுதுவதில்லை. அரசாங்கத்தின் கைககள்தான் அவர்கள் மூலம்தீர்ப்புகளை எழுதுகின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக நீதிமன்றங்கள் சிலவற்றில் வெளியான சிலதீர்ப்புகளை, நீதிபதிகள் எழுதவில்லை. அவர்கள் மூலமாக அரசின் கைகள் இந்தத் தீர்ப்புகளை எழுதியுள்ளன.நான் அனைத்து நீதிபதிகளையும் குற்றம் சாட்டவில்லை. சில நீதிபதிகளைத் தான் குறிப்பிடுகிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதியை வளைக்க முயன்றதாக மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும். விளக்கம் தர முடியவில்லைஎன்றால் மாநில அரசு விலக வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபையைக் கலைத்து விட்டு முன் கூட்டியே தேர்தல் நடத்த ஜெயலலிதாதானாகவே முன்வர வேண்டும். அதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.

பொடா எதிர்ப்புப் போராட்டத்தை கைவிட முடியாது. டிசம்பர் 15ம் தேதி நடக்கவுள்ள போராட்டம் பொடாவுக்குமட்டும் எதிரானதல்ல, மற்ற சில பிரச்சினைகளுக்காகவும்தான் நடத்தப்படவுள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், டிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 அரசு ஊழியர்களையும் மீண்டும் பணியில்சேர்த்துக் கொள்வோம் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X