ரணிலுடன் பழைய பகையை மறக்கத் தயார்: சந்திரிகா
கொழும்பு:
தானும்ம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்வது தொடர்பாகஅமைக்கப்பட்ட 4 அதிகாரிகள் கமிட்டி டிசம்பர் 15ம் தேதிக்குள் தனது அறிக்கையைத் தாக்கல் செய்துவிடும் எனஅதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.
அதிபரை இரு முறை சந்தித்துப் பேசிய ரணில், புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சந்திரிகாவையும்பங்கு கொள்ளச் செய்வேன் என்று நேற்று அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இருவருக்கும் இடையிலானக் கருத்து வேறுபாடுகளைக் கலையவும், அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் பரிந்துரைகள் செய்யவும் அமைக்கப்பட்ட கமிட்டி டிசம்பர் 15ம் தேதிக்குள் தனதுஅறிக்கையை சமர்பிக்கும் என சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் சரத் அமுகமா கூறியுளளார்.
அவர் கூறுகையில், பழையவற்றை மறந்துவிட்டு செயல்பட அதிபர் தயாராக உள்ளார். பழையதை மறந்தால் தான்எதிர்காலத்தில் இணைந்து செயல்பட்டு, பயணிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications