அழகிரியை கைது செய்ய வாரண்ட்: நீதிமன்றம் அதிரடி!
மதுரை:
திருட்டு விசிடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியைக் கைது செய்ய வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைதான சில நாட்களில், மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையவளாகத்தில் அழகிரி வைத்துள்ள வீடியோ கடையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
கடையில் அனுமதியில்லாத ஆயிரக்கணக்கான விசிடிக்கள் இருந்ததாகக் கூறிய போலீஸார் இது தொடர்பாகஅழகிரி, அவரது கடை மேலாளர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் இந்தவழக்கில் பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகினர்.
இந் நிலையில் இந்த வழக்கு ஐந்தாவது குற்றவியல் நீதிபதி இந்திராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுதாமோதரன் மட்டுமே ஆஜரானார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அழகிரியால் ஆஜராக முடியவில்லைஎன்று அவரது வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, டிசம்பர் 12ம் தேதி அழகிரி கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கைது வாரண்ட்டை பிறப்பித்தார்.
தா.கி. கொலையில் கைதான அழகிரி இப்போது நிபந்தனை ஜாமீனில் வேலூரில் உள்ளார்.