For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது கஷாயம் குடித்த 4 பேர் பரிதாப சாவு

By Staff
Google Oneindia Tamil News

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மலிவு விலையில் கிடைத்த மதுக் கஷாயத்தைக் குடித்த ஒரு பெண் உள்பட 4 பேர்பரிதாபமாக இறந்தனர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே மதுக் கஷாயம் விற்கப்படுவது வழக்கமானது. மலிவு விலையில்கிடைக்கும் இந்த மதுக் கஷாயம் நல்ல போதை தருவதால், இதை ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வாங்கிக்குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையும் பலர் மதுக் கஷாயம் வாங்கிக் குடித்துள்ளனர். இதில் 2 பேர் சம்பவஇடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் மயங்கி விழுந்த சிலரை மருத்துவனைக்குக் கொண்டுசென்றனர். அதில் 2 பேர் வழியிலேயே இறந்து விட்டனர். 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மதுக் கஷாயத்தை வாங்கிக் கொடுத்த சீனு, விற்பனை செய்த 2பேர் உள்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளதாக சிதம்பரம் துணைப் போலீஸ் கண்காணிப்பாளர் பழனி தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X