For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனி பள்ளிகளை சென்னையில் தொடங்கி வைத்த ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேனி மாவட்டத்தில் 19 புதிய ஆரம்பப் பள்ளிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மேலும் தமிழக அரசின் கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளஅறிவியல் தமிழ் பாடப் புத்தகங்களை வெளியிட்டார்.

எல்லோருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் ரூ. 340 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 356 புதிய ஆரம்பப்பள்ளிகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வரிசையில், தேனி மாவட்டத்தில் 19 புதிய ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் கட்டப்படவுள்ளன. அவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றுநடந்தது.

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பள்ளிக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். புதிய கட்டடம்கட்டப்படும் வரை இந்த பள்ளிகள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மயிலாடும்பாறை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கிராமங்களில்புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் தலா 2 செகண்ட் கிரேடு ஆசிரியர்கள் இருப்பார்கள்.

அறிவியல் தமிழ் புத்தகங்களை வெளியிட்டார் ஜெ.

எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் தமிழ் என்ற பாடம்அறிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புத்தகங்களை தமிழக அரசின் கல்வித்துறை தயாரித்துள்ளது.

இந்தப் புத்தகங்களை ஜெயலலிதா வெளியிட்டார். அச்சிடப்பட்டுள்ள 17 லட்சம் புத்தகங்களும் தமிழகத்தில் உள்ளமெட்ரிகுலேஷன் பள்ளிகள் , ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.

முதல் முறையாக இந்த ஆண்டு இப்பாடம் அறிகப்படுத்தப்பட்டுள்ளதால், புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கஅரசு முடிவு செய்தது. ரூ. 5.42 கோடி செலவில் இப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரசின்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X