முத்திரைத் தாள் கட்டணம் அதிரடி குறைப்பு
சென்னை:
தமிழகத்தில் முத்திரைத் தாள் கட்டணம் 13 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலம், வீடு வாங்குவோர் முத்திரைத் தாள் கட்டணமாக இதுவரை நகர்ப்புறங்களில் 13 சதவீதம்,கிராமப்புறங்களில் 12 சதவீதம் கட்டி வந்தனர். இது அதிகமாக உள்ளதாகவும், எனவே முத்திரைத் தாள்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரி வந்தனர்.
இந் நிலையில் நேற்று முத்திரைத் தாள் கட்டணத்தை கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் ஒரே மாதிரியாக, 8சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இனிமேல் தமிழகத்தில் சொத்துக்களைப் பதிவு செய்யவிரும்புவோர், முத்திரைத் தாள் கட்டணம் 8 சதவீதம் மற்றும் பதிவுக் கட்டணம் 1 சதவீதம் ஆகியவற்றை சேர்த்துமொத்தம் 9 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், சனிக்கிழமை முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்குமட்டுமே இந்த உத்தரவு செல்லும் எனவும், ஏற்கனவே பத்திரப் பதிவு அலுவலகங்களில் நிலுவையில் உள்ளஆவணங்களுக்கு இது செல்லாது எனவும் அரசு அறிவித்துள்ளது.
தென் மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிகளவில் முத்திரைத் தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.கேரளத்தில் 9 சதவீதம், கர்நாடகத்தில் 9.4 சதவீதம், ஆந்திராவில் 13 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணம்வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications