ரூ. 10 கோடி பணத்துடன் அலையும் வீரப்பன்: நடராஜ்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் ரூ. 10 கோடி பணத்துடன் காட்டில் சுற்றிக் கொண்டிருப்பதாக சென்னை மாநகரக்காவல்துறை ஆணையரும், முன்னாள் அதிரடிப்படை தலைவருமான நடராஜ் கூறியுள்ளார்.
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த நடராஜ் தற்போதுசென்னை நகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நடராஜ் பேசுகையில், வீரப்பன் காட்டுக்குள்தான் இருக்கிறான். ஆனால் தமிழகஎல்லைக்குள் அவன் இல்லை.
கடந்த முறை நடந்த ராஜ்குமார் கடத்தலுக்குப் பின் அவனுக்கு ரூ. 10 கோடி பணம் கிடைத்தது. அந்தப் பணத்துடன்அவன் காட்டுக்குள் உலவி வருகிறான். அவனது தேவைகளுக்காக எப்போதுமே அவன் காட்டை விட்டுவெளியேறியதில்லை. தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு தனக்கு தேவையானதைப் பெற்றுவருகிறான்.
வீரப்பனைப் பிடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் அவனிடம் ஆள் பலம் இப்போது இல்லை, வெகுவாகக்குறைந்து விட்டது. உள்ளூர் மக்களின் ஆதரவு இப்போது அவனுக்கு அதிகமாக இல்லை. அதிரடிப்படையின்தொடர் முயற்சிகள்தான் இதற்குக் காரணம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications