இப்தார் விருந்து: ஜெ. வரவில்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக சார்பில் சென்னையில் நேற்று நடந்த ரம்ஜான் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாகலந்துகொள்ளவில்லை. ஆனால் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் சென்னையில் சனிக்கிழமை இரவு இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொள்வார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மாறாக, அமைச்சர்கள் பன்னீர் செல்வம், பொன்னையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் தலைமை காஜியார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான முஸ்லீம்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications