For Daily Alerts
Just In
மும்பை: ரன்வேயை விட்டு விலகி ஓடிய ஜெட் ஏர்வேஸ் விமானம்- பயணிகள் தப்பினர்
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தாறுமாறாகஓடியது. இதனால் விமானத்திற்கு சிறிது சேதம் ஏற்பட்டாலும் பத்திரமாக நின்றுவிட்டது. இதனால் பயணிகள்அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பாவ்நகரில் இருந்து இந்த விமானம் இன்று காலை மும்பை வந்தது. சத்ரபதி பன்னாட்டு விமான நிலையத்தில்விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்தது.
பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, November 25, 2003, 5:30 [IST]