For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதவி இறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் வேலையில்லை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

3 நீதிபதிகள் குழுவால் பதவி இறக்கம் செய்யப்பட்ட 56 அரசு ஊழியர்களுக்கு இன்னும் பணி நியமன உத்தரவுவழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் ஆன அரசு ஊழியர்கள் வழக்கை விசாரித்து வந்த 3நீதிபதிகள் குழு தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் சென்னை மாவட்ட அரசு ஊழியர்கள் மீதான விசாரணைமுடிவை அரசிடம் தெரிவித்தது.

இதன்படி 587 பேர் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 56 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டார்கள்.மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டது.

இவர்களில் பதவி இறக்கம் செய்யப்பட்ட 56 பேருக்கு இன்னும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.அவர்களுக்கு என்ன பதவி கொடுப்பது என்பதில் அரசுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாலும், தீர்ப்பு நகல் இன்னும்அவர்களுக்கு வழங்கப்படாத காரணத்தாலும் அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படாமல் உள்ளது.இதனால் அவர்கள் இன்னும் வேலையில் சேர முடியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X