இந்தியில் பேசி அசத்திய ஜெயலலிதா!
சென்னை:
டான்சி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்துக் கேட்ட இந்தி தொலைக்காட்சி சேனலின் நிருபருக்கு இந்தியிலேயே பதில்சொல்லி அசத்தினார் முதல்வர் ஜெயலலிதா.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார் ஜெயலலிதா. இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு செய்தியாளர்கள் கூட்டம் பறந்தது. அப்போது நிருபர்களின் கேள்விகளுக்குஆங்கிலத்தில் பதில் சொன்ன ஜெயலலிதா, ஜி டிவி நிருபரின் கேள்விக்கு இந்தியிலேயே பதில் சொல்லிஅசத்தினார்.
எல்லாம் அவன் செயல், கடவுளுக்கு நன்றி என்பதை இந்தியில் அவர் சொன்னபோது, கேள்வி கேட்ட டிவிநிருபரின் முகத்தில் பயங்கர ஆச்சரியம்.
தேசிய அளவில் அரசியல் களம் காண தான் தயாராக இருப்பதை உணர்த்தவே ஜெயலலிதா இந்தியிலும்பேசினாரோ?
வாஜ்பாயை வரவேற்ற ஜெ:
உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் உற்சாகமாக இருந்த ஜெயலலிதா, மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் வாஜ்பாயை வரவேற்க விமான நிலையம் சென்றார்.
கடந்த முறை வாஜ்பாய் சென்னை வந்தபோது அவரை ஜெயலலிதா வரவேற்கவில்லை. மாறாக ஊட்டி நிகழ்ச்சியில்கலந்து கொள்ள சென்று விட்டார். இந் நிலையில் மாறன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவுவாஜ்பாய் சென்னை வந்தபோது அவரை விமான நிலையம் சென்று ஜெயலலிதா வரவேற்றார்.
முதல்வர் தவிர, ஆளுநர் ராம் மோகன் ராவ், மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம், திருநாவுக்கரசர்,பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோரும் வாஜ்பாயை வரவேற்றனர்.
பெசன்ட் நகர் இடுகாட்டில் மாறனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் வாஜ்பாய்சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்பினார். அவருடன் வந்த முன்னாள் பிரதமர் குஜ்ராலும் அதிலேயே டெல்லிபுறப்பட்டார். அதே விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் டெல்லி திரும்பினார்.












Click it and Unblock the Notifications