ராஜகோபால் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுதள்ளுபஐ செய்யப்பட்டது.
வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதியை திருமணம் முடிப்பதற்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக்கொலை செய்தார் என்று ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் முன் ஜாமீன் பெற்றார். இந் நிலையில் ஜீவஜோதியின் சொந்தஊரான தேத்தாக்குடி சென்று தனக்கு ஆதரவாக வழக்கில் சாட்சி கூறுமாறு ஜீவஜோதியை மிரட்டியதாக அவர் மீதுமற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மனுத் தாக்கல்செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், மனுதாரரை ஜாமீனில் விட்டால் அவர் மீண்டும்சாட்சியைக் கலைக்க நேரிடலாம் என்ற அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று. ஜாமீன் மனுவைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நாளைமறுநாள் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கு விசாரிக்கப்பட உள்ளதும், அதற்காக ஜீவஜோதியைப்போலீஸார் சென்னை அழைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.