தமிழகத்தில் நாளை ரம்ஜான், கோவை- நெல்லையில் இன்று கொண்டாட்டம்
சென்னை:
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி காஜிசலாஹுதின் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 24ம் தேதி ஷவால் மாதத் தொடக்கத்திற்கானபிறை காணப்படவில்லை. இதனால் 26ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை- நெல்லையில் இன்று
கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஷவ்வால் மாத தொடக்கத்தின் அறிகுறியான பிறை தென்பட்டதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் இன்று ரம்ஜான்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளாவுக்கு அருகில் உள்ள கோவை, நெல்லை மாவட்டங்களில்உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினர்.
கோவை கோட்டை மேடு பகுதியில் உள்ள மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகையில் கலந்து கொண்டனர்.