நீதிபதிக்கு நிர்பந்தங்கள் வந்ததாக கருணாநிதி கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனக்கு அவப் பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே என் மீது பழி சொல்லியிருக்கிறார் நீதிபதி கற்பக விநாயகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஜனனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி கற்பக விநாயகம் விலகிக் கொண்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கருணாநிதி தெரிவித்திருந்த சில கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு கருணாநிதி இன்று பதில் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஜனனியின் ஜாமீன் மனுவை கற்பக விநாயகம் விசாரிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் ஒரு மனு காலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி தீர்ப்பு கூற இருந்த நிலையில், தன்னை நீக்கிவிட்டு ஜனனி வழக்கில் தீர்ப்பு வருவதை விரும்பாத கற்பக விநாயகம், அவராகவே வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

மேலும், தனக்கு அவப் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், சில நிர்பந்தங்கள் காரணமாகவும் என் மீது குறை சொல்லியிருக்கிறார். அவர் நல்ல நீதிபதிதான். ஆனால் நிர்பந்தங்கள் அவ்வாறு கூற வைத்துள்ளது.

இந்த வழக்கை நீதிபதி கற்பக விநாயகம் நடத்திய விதம், விசாரித்த முறை ஆகியவற்றைப் பார்த்தபோது, ஜனனிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலை இருந்தது.

ஆனால் இடையில் ஏற்பட்ட சில நிர்பந்தங்களினால் நீதிபதி கற்பக விநாயகம் என்னைக் குறை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+