டெஸ்மா வழக்கு: இளங்கோவன் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறி அரசு தொடர்ந்துள்ள வழக்கில் காங்கிரஸ்கட்சியின் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கைநகலைப் பெற்றுக் கொண்டார்.
அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தைத் தூண்டி விட்டதாகக் கூறி திமுக தலைவர் கருணாநிதி, இளங்கோவன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜன் ஆகியோர் மீது அரசு டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதில் நல்லகண்ணுவும், வரதராஜனும் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திக்கை நகலைப்பெற்றுக் கொண்டனர். இன்று இளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் 4 பக்கங்கள் கொண்டகுற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அரசு தொடர்ந்துள்ள பொய்வழக்கு. இதை எதிர்கொள்ள அஞ்ச மாட்டேன். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.அனைத்து எதிர்கட்சிகளும் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராடும் என்றார் அவர்.