போலீஸ் மிரட்டல்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு
காஞ்சிபுரம்:
போலீஸார் மிரட்டலின் காரணமாக கணவர் ஊரை விட்டு ஓடியதால் மனம் உடைந்த பெண், காஞ்சிபுரம் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ஒரு வழக்கு தொடர்பாக போலீஸ்காரர் பாலசுப்ரமணியம் அடிக்கடிவிசாரணை என்ற பெயரில் மிரட்டி வந்ததால், பயந்து போன சுந்தரமூர்த்தி தனது இரண்டு குழந்தைகளுடன் ஊரைவிட்டு வெளியேறி விட்டார்.
கணவர் ஊரை விட்டுப் போய் விட்டதால் நிர்க்கதி ஆன பிரேமா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அவர் அங்கு தீக்குளித்தார்.அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயமடைந்த நிலையில் உள்ள பிரேமாவிடம் மாவட்ட குற்றவியல் நடுவர் வாக்குமூலம் பெற்றுநடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications