பிரபாகரனுடன் ஐரோப்பிய யூனியன் தூதர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஐரோப்பிய யூனியன் தூதர் கிர்ஸ் பேட்டன் இன்று சந்தித்துப் பேசினார். இன்று பிரபாகரனுக்கு 49வது பிறந்த நாளாகும்.

இச் சந்திப்பு குறித்து புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகள் அமைப்பின் தூதர் கிறிஸ் பட்டன் இன்று பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். போர் நிறுத்தம் தொடர்வது இலங்கை அரசின் கையில்தான் உள்ளது என்பதை பிரகாபரன் அவரிடம் விளக்கினார். எங்களால் ஒருபோதும் அமைதி குலையாது என கிறிஸ் பேட்டனிடம் உறுதி தந்துள்ளோம்.

3 நாள் பயணமாக இலங்கை வந்த கிறிஸ் பேட்டன் நேற்று அதிபர் சந்திரிகா வைச் சந்தித்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கிளிநொச்சி வந்து பிரபாகரனைச் சந்தித்தார்.

பிரபாகரனை கிறிஸ் பேட்டன் சந்திப்பதற்கு சந்திரிகாவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஒயிட் டைகர் கிறிஸ் பேட்டனே, நாட்டை விட்டு வெளியே போ என அவர்கள் கோஷமிட்டனர். -->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+