தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 7,000 கோடியாக உயர்வு
கோவை:
நாட்டின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 17 சதவீதமாக உள்ளது. இதை 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் விவேக் ஹரிநாராயன் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2001ம் ஆண்டில் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 3,116 கோடியாக இருந்தது.
இந்த ஆண்டு அது ரூ. 7,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது 128 சதவீத வளர்ச்சியாகும். தேசிய அளவிலான சாப்ட்வேர் ஏற்றுமதியில் இது 17 சதவீதமாகும். 2008ம் ஆண்டில் தமிழகத்தின் பங்கை 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் சாப்ட்வேர் உற்பத்தியில் கணிசமான வளர்ச்சியை எட்டி வருகின்றன. இதனால் தமிழகம் தனது உற்பத்தியை தொடர்ந்து 3 அதிகரித்தால் தான் போட்டியை சமாளிக்க முடியும்.
கோவையில் ஒரு சாப்ட்வேர் பார்க் உருவாக்கப்படவுள்ளது. இதற்காக கோவை மருத்துவக் கல்லூரி அருகே 2,50,000 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ரூ. 35 கோடியில் ஒரு சாப்ட்வேர் பார்க் உருவாக்கப்படும்.