For Quick Alerts
For Daily Alerts
Just In
"சுத்தமானது" மெரீனா கடற்கரை!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த தார் சாலைகள அனைத்தும் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. தற்போது கடற்கரையில் மணலைத் தவிர வேறு எதுவும் இல்லை.
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெயருடைய மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தி, அழகுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சீரணி அரங்கம் உள்ளிட்ட சில கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
இந் நிலையில் காமராஜர் சாலையிலிருந்து சீரணி அரங்கத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தார்ச் சாலையையும் அகற்றும் பணி தொடங்கியது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இந்தப் பணி நேற்றுடன் முடிவடைந்தது.
மேலும் கடற்கரையில் இருந்த பிற குறுக்கு தார்ச் சாலைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் கடற்கரை பளிச் என்றும், பெரியதாகவும் காட்சியளிக்கிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, November 27, 2003, 5:30 [IST]