For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3வது அணி: ஜெவுக்கு விஸ்வ இந்து பரிஷத் ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேசிய அளவில் ஜெயலலிதா 3-வது அணி அமைத்தால் அவருக்கு இந்துக்கள் முழுமையான ஆதரவு தருவார்கள் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய அளவில் 3-வது அணி அமைக்க முயற்சிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி அவர் அமைத்தால், அவருக்கு இந்துக்களின் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும்.

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம், இந்துக்களின் பாரம்பரியத்தை ஜெயலலிதா காப்பாற்றியுள்ளார். அவரை இந்துக்கள் முழு மனதுடன் ஆதரிப்பார்கள்.

விஸ்வ இந்து பரிஷத் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததல்ல. ஆனால் இந்துக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைக் காக்க பாடுபடுவோருக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.

அயோத்தி பிரச்சனை ராமர் கோவில் சம்பந்தப்பட்டதல்ல. அது இந்து தர்மத்தைக் காக்க நடக்கும் போராட்டமாகும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X