For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்புதுறை: சந்திரிகாவின் சமரசத் திட்டத்தை நிராகரித்தார் ரணில்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

பிரதமர் ரணில் பரிந்துரைக்கும் அமைச்சரிடம் பாதுகாப்புத்துறையை வழங்குவதாகவும் அவருடன் இணைந்து பாதுகாப்புத்துறையை நிர்வகிப்பதாகவும் இலங்கை அதிபர் சந்திரிகா அறிவித்துள்ளார். ஆனால், இந்த சமரசத் திட்டத்தை ஏற்க ரணில் மறுத்துவிட்டார்.

ரணிலின் அமைச்சர் வசம் இருந்த பாதுகாப்பு, போலீஸ் மற்றும் செய்தித்துறைகளை சந்திரிகா தன்வயப்படுத்திக் கொண்டார். இதையடுத்து புலிகளுடன் இனி தன்னால் பேச்சு நடத்த முடியாது என ரணில் கூறிவிட்டார்.

பேச்சுவார்த்தைகள் நடத்தும் வகையில் அரசியல் சூழலை உருவாக்குமாறு சந்திரிகாவுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்து வருவதால், ரணில் சொல்லும் நபரிடம் பாதுகாப்புத்துறையை வழங்குவதாக சந்திரிகா தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், சந்திரிகாவின் இந்த சமரசத்தை ரணில் ஏற்க மறுத்துவிட்டதாக பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X