கன மழை தொடர்கிறது: தாமிரபரணியில் வெள்ளம்- குமரியில் கடல் கொந்தளிப்பு
சென்னை:
பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக கன மழை பெய்தது. பாண்டிச்சேயில் கன மழையால் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீல் மிதக்கின்றன.
பாண்டிச்சேயில் சனிக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி வானவில் நகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக உள்ளது.
இப்பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை வெளியேற்ற அரசு முழு வீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. நெல்லையில் பெய்து வரும் கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரைப் பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரி கடலில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.