அரசு நிலத்தை சுருட்டிய பொன்முடி: ஊழல் தடுப்புப் போலீஸ் விசாரணை
சென்னை:
அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனது மாமியார் பெயரில் பங்களா கட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக ஊழல் தடுப்புப் போலீஸார் பொன்முடியிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.
சைதாப்பேட்டையில் பிரபல டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான 2 கிரவுண்ட் நிலத்தை அரசிடம் வழங்கினார். நில உச்ச வரம்புச் சட்டப்படி அவரால் இந்த நிலத்தை வைத்திருக்க முடியாது என்பதால் அதை அரசிடம் தந்தார்.
இந்த நிலத்தை ரேசன் கடைக்கு அரசு ஒதுக்கியதாகவும், அங்கு கண்ணப்பன் என்ற கூலித் தொழிலாளி குடிசை போட்டு வசித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந் நிலையில் கண்ணப்பனை விரட்டியடித்துவிட்டு, த்தை போலி ஆவணங்கள் தயார் செய்து அந்த நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பொன்முடி வாங்கியதாக போலீசார் கூறுகின்றனர். ஏற்கனவே அவர் மீது சொத்துக் குவிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் ஊழல் தடுப்புப் போலீஸார் இந்த புதிய வழக்கையும் பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் பொன்டிமுயிடம் கடந்த சனிக்கிழமை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
பொன்முடி சுருட்டியதாகக் கூறப்படும் இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 90 லட்சமாகும்.












Click it and Unblock the Notifications