ரேசன் கார்டுகளில் எச் முத்திரை பதிக்க மேலும் 1 மாதம் அவகாசம்
சென்னை:
மாத ஊதியம் ரூ. 5,000க்கு மேல் உள்ள குடும்பங்களின் ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை பதிக்க கால அவகாசம் இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ 5,000க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை எச் முத்திரை குத்தி கெளரவ அட்டைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்துடன் இந்த காலக் கெடு முடிவடைந்தது.
முத்திரை பதிக்காதவர்களின் கார்டுகள் கையகப்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந் நிலையில் வெளியூர் சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக குடும்ப அட்டைகளில் எச் த்திரை பதித்துக் கொள்ள இயலாதவர்கள், கூடுதல் கால அவகாசம் கேட்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்தாகவும்,
இதைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, முத்திரை பதித்துக் கொள்ள மேலும் 1 மாத கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் மாத மாத இறுதி வரை அனைத்து வேலை நாட்களிலும் சம்பந்தப்பட்ட வட்ட உணவு வழங்கல் அதிகாரியின் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளைக் கொடுத்து எச் முத்திரை பதித்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications