சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: சி.பி.ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
கோவை:
சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த 2000மாவது ஆண்டு கோவையில், பா.ஜ.க. தொண்டர் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி என்பவர் மீது பா.ஜ.க. தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது கோவை போலீஸார், முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications