பத்திரிக்கை சுதந்திரம் அடிப்படை உரிமை: ஜனா. கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
பத்திரிக்கை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும். இதில் தலையிடும் வகையில் சில நிகழ்வுகள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் பா.ஜ.க. தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் பி.டி.ஐ. செய்தி நிறுவன பொன் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜனா. கிருஷ்ணமூர்த்தி அங்கு பேசுகையில், அரசியல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் பத்திரிக்கை சுதந்தரத்தில் தலையிடும் போக்கு ஆங்காங்கே இருந்து கொண்டுதான் உள்ளது.
சமீபத்திய இந்து பத்திரிக்கை விவகாரம், கர்நாடகாவில் நீதிபதிகளின் செக்ஸ் புகார் குறித்த விவகாரம் பத்திரிக்கை சுதந்திரம் குறித்த கேள்விக்குறியை எழுப்பியுள்ளன. அரசு இயந்திரம் எல்லை மீறிப் போவது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்.
பத்திரிக்கை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும். அதில் யாரும் தலையிடக் கூடாது. இதன் காரணமாகத்தான், அரசியல் சட்டத்தில் இது குறித்துக் குறிப்பிடப்படவில்லை என்றார் அவர்.
இந்து ஆசியர் ராம் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பேசினர்.












Click it and Unblock the Notifications