தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ வழக்கு டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஹோட்டல்வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் வன்முறைச்சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதில், தர்மபுரி அருகே, கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது.இந்த கொடூர சம்பவத்தில் 3 மாணவிகள் உயிருடன் கருகி பிணமாயினர்.
இது தொடர்பாக அதிமுகவினர் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை முறையாகநடக்கவில்லை என்று கூறி பலியான மாணவிகளில் ஒருவரின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இதையடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து சேலம் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதன்படி சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.நேற்று குற்றம் சாட்டப்பட்ட 31 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். காவல்துறை தரப்பில்,துணைக்கண்காணிப்பாளர் ரங்கசாமி, ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் ஆஜராகினர்.
அனைவரையும் விசாரித்த பின்னர் வழக்கை வருகிற 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications