பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் 3 தமிழக ஜாதிகள்
டெல்லி:
மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 3 ஜாதிகளைச் சேர்க்க மத்தியஅமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் வருவதையொட்டி ஓட்டு வாங்க, அம் மாநிலத்தைச் சேர்ந்த சில ஜாதிகளைபிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வைக்கும் முயற்சியை எடுத்தார் முதல்வர் நாயுடு.
நாயுடுவின் கோரிக்கையை ஏற்று அவர் சொன்ன ஜாதிகளை பிற்பட்டோர் பட்டியலில் மத்திய அரசு சேர்க்க முன்வந்துள்ளது. அதே நேரத்தில் நாயுடுவுக்காக செய்வதாகத் தெரியக் கூடாது என்பதால் தமிழ்நாடு, பீகார், சிக்கிம்,உத்திரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சில ஜாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில்வசிக்கும் தாசபலஞ்சிகா ஆகிய சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications