ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி: தமிழக டாக்டருக்கும் தொடர்பு
சென்னை:
இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கும் ரூ. 30,000 கோடி முத்திரைத் தாள் மோசடியில் தமிழகத்தைச்சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
கரன்சி மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடிக்கும் அரசுக்குச் சொந்தமான நாசிக் பிரஸ்சில் இருந்து இயந்திரங்களைவாங்கி போலி முத்திரைத் தாள்கள் அச்சடிக்கப்பட்டு ரூ. 30,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
இதில் முக்கியக் குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்டுள்ளான். முன்னதாக இவனைக் கைதுசெய்யாமல் அவனைக் காப்பாற்றி வந்த மும்பை போலீஸ் கமிஷ்னர் சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி முத்திரைத் தாள்களை அச்சிட்டு 14 மாநிலங்களில் தெல்கி விற்றிருந்தாலும் கர்நாடகம், மகாராஷ்டிரம்ஆகிய மாநிலங்களில் தான் போலி முத்திரைத் தாள் மோசடி பெரும் அளவில் நடந்துள்ளது. இதில் பலஅரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சென்னையிலும் போலி முத்திரைத் தாள்கள் உலா வருவதைக் கண்டறிந்த சிபிசிஐடி போலீசார் ரகசியவிசாரணையில் இறங்கியுள்ளனர். இதில் அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் நிஜாமூதீன் என்பவர் உள்பட 6 பேர்சிக்கியுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி முத்திரைத் தாள்களை கர்நாடகத்தில் இருந்து வாங்கியதாகத்தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பலுக்கும் தெல்கிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து போலி முத்திரைத் தாள் விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐயிடம் டாக்டர் நிஜாமூதீனைஒப்படைக்க தமிழக சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பணம் மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடிக்கும் இயந்திரங்களை அரசுக்குச் சொந்தமான பிரஸ்ஸில் இருந்தேதெல்கி வாங்கியுள்ளான். அவனுக்கு இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டதில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications