அரவாணிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோட்டில் அரவாணிகளுக்காக 4 சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்இதைத் தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில், 76 அரவாணிகள் சேர்ந்து 4 சுய உதவிக் குழுக்களை அமைத்துள்ளனர். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார். அரவாணிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் அனைத்துவகையான உதவிகளையும் செய்யும் என்று அப்போது ஆட்சித் தலைவர் உறுதியளித்தார்.
அரவாணிகளுக்காக ஈரோட்டில் விரைவில் மாதிரி கிராமம் உருவாக்கப்படும் என்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம்வங்கிக் கடனை முறையாகப் பெற்று சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ அரவாணிகள் முயல வேண்டும் என்றும்தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அரவாணிகள் சங்கத் தலைவர் சாந்தி, செயலாளர் ராதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications