மேலும் 63 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை கடும் தாக்குதல் நடத்தி, 63 மீனவர்களைக் கைதுசெய்துள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கசென்றனர். அப்போது அங்கு இலங்கை கடல்படையைச் சேர்ந்த கப்பல் ஒன்று வந்தது. அதில் இருந்தவர்கள்கப்பலைக் கொண்டு தமிழக மீனவர்களின் படகுகள் மீது மோதினர். இதில் பல படகுகள் சேதமடைந்தன.

தனுஷ்கோடி அருகே நடந்த இச் சம்பவத்தில் வலைகளையும் அறுத்தெறித்த இலங்கைக் கடற்படையினர், 63மீனவர்களை கையை, காலைக் கட்டி கப்பலில் இழுத்துப் போட்டுச் சென்றனர். 13 படகுகளையும் பிடித்துச்சென்றனர்.

நேற்று இச் சம்பவம் நடந்தது. ஆனால், இன்று தான் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை வெளியில்தெரிந்துள்ளது. பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 26 பேர் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,மற்றையோர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

சனிக்கிழமையன்று விடுதலைப் புலிகளின் கடல் பிரிவு 32 தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்றது. நார்வேகண்காணிப்புக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தின்பரபரப்பு அடங்கும் முன் மறுபடியும் அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது, ராமேஸ்வரம் பகுதி மீனவர்குடும்பங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+