2வது மனைவியுடன் முன்னாள் எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தேனி பன்னீர் செல்வம் தனது 2வது மனைவியுடன்சென்னை தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 1992ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தேனி பன்னீர் செல்வம். இவர்தற்போது பாரதீய ஜனதாக் கட்சியில் உள்ளார்.
இவர் மீதும், இவரது இரண்டு மனைவிகளான ஜானகி மற்றும் தனபாக்கியம் ஆகியோர் மீதும் வருமானத்திற்குமீறிய வகையில் சொத்து குவித்ததாக சென்னை தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில்கடந்த மாதம் 19ம் தேதி முதல் மனைவி ஜானகியுடன் பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந் நிலையில் இன்று இரண்டாவது மனைவி தனபாக்கியத்துடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் பன்னீர் செல்வம்.அப்போது, வருகிற 10ம் தேதி இரண்டு மனைவிகளுடன் பன்னீர் செல்வம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.